செங்கல்பட்டு மாவட்டம், பழைய பல்லாவரம் பாலாறு மற்றும் வைகை தெருவில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைகக் நடவடிக்கை எடுக்க வேண்டும்.