கிடப்பில் போடப்பட்ட தார்ச்சாலை பணி

Update: 2023-12-03 13:04 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சிறுபோது  கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு மாதத்திற்கு முன்பு தார்ச்சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சாலை அமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் முதியவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே விரைவில் தார்ச்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்