பாதியில் நின்ற சாலைப் பணி

Update: 2026-06-21 11:29 GMT

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் வீரியாபாளையம் கிராமம் கண்ணமுத்தாம்பட்டியில் இருந்து கடவூர் வட்டம் கரட்டுபட்டி வரை உள்ள சாலையை தார்ச்சாலையாக மாற்றியமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு 3 மாதங்களாகிய நிலையில், பணிகள் பாதியிலேயே நின்றுவிட்டன. சாலையில் சிதறிக் கிடக்கும் ஜல்லிக்கற்களால் இருசக்கர வாகனங்கள் வழுக்கி விழுந்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுடன், பொதுமக்கள் நடந்து செல்லவும் முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணிகளை உடனடியாகத் தொடங்கி விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்