குண்டும், குழியுமான சாலை

Update: 2023-12-03 11:46 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம், சா.அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது தெற்கியூர் வழியாக அக்கரைப்பட்டி சாய்பாபா கோவில், தேவிமங்கலம், கீழுர், தெற்குமேடு போன்ற கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலையில் சில இடங்களில் பெரிய அளவிலான பள்ளம் இருப்பதினால் தற்போது பெய்த மழைநீர் அந்த பள்ளங்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்