பள்ளமான சாலை

Update: 2023-12-03 11:46 GMT

பெரம்பலூர்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பந்தட்டை வேதநதி ஆற்றுப்பாலம் அருகிலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகிலும் சாலையில் பள்ளம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரமைத்தனர். தற்போது அந்த சீரமைக்கப்பட்ட பள்ளம் மீண்டும் பழுது ஏற்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை தார் ஊற்றி சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்