சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-12-03 10:11 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா ஸ்ரீவாஞ்சியம் கிராமத்தில் தேரோடும் வீதியில் சாலை பராமரிப்பின்றி உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். மழைக்காலத்தில் சாலையில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் சாலை வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. சாலை குண்டும்,குழியுமாக இருப்பதால் தேர்பவனி செல்வதிலும் சிக்கல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்