சென்னை பெருங்குடி, வெங்கடேசன் மெயின் ரோடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், மழை காலங்களில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே, அந்த சாலை செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.