சகதியாகும் சாலை

Update: 2023-11-26 14:09 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் இருந்து தொண்டப்பாடி வரை சாலை ஓரத்தில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் தோண்டப்பட்ட பள்ளங்களில் மண் நிரப்பப்பட்டது. இந்நிலையில் பள்ளத்தில் நிரப்பட்ட மண் போக மீதமுள்ளவை சாலையோரம் கிடப்பதினால் தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்