சாலை, தெரு விளக்கு வசதி வேண்டும்

Update: 2023-11-26 12:43 GMT

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வின் நகர் 11-வது குறுக்குத் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் இப்பகுதியில் சில இடங்களில் தெரு விளக்கு வசதிகள் முறையாக இல்லாததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்