சாலை வசதி வேண்டும்.

Update: 2023-11-26 10:11 GMT

திருவாரூர் மாவட்டம் அடிமத்தமங்கலம் புதுக்காலனி பகுதியில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், தெருவில் உள்ள ஒருசில தார்சாலைகளும் முறையான பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையை மழைநீர் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. மண்பாதைகள் முழுவதும் சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள்,மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் முறையான சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்