சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-11-26 10:10 GMT

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா கோட்டூர் ஒன்றியம் பாளையூர் கிராமத்தில் உள்ள சாலை முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதனால் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகி உள்ளன. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.




மேலும் செய்திகள்