கடலூர் அருகே கீழ் அழிஞ்சப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட செங்காட்டு காலனி கோவில் தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே அப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.