கிடப்பில் போடப்பட்ட தார்சாலை பணி

Update: 2023-11-19 16:42 GMT
கூடலூர் இருந்து ஏகலூத்து வரை 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக தார்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. மண்ணை கொட்டி, அதன்மீது ஜல்லிக்கற்கள் போடப்பட்டது. கடந்த சில வாரங்களாக பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்