சேறும்,சகதியுமான சாலை

Update: 2023-11-19 11:15 GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் ஒன்றியம் இடையாற்று ஊராட்சி பாலம் முதல் தோப்புநாயகன் பகுதி வரை சாலை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சாலை சேறும்,சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன்கருதி மேற்கண்ட பகுதியில் புதிய சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.


மேலும் செய்திகள்