குண்டும்,குழியுமான சாலை

Update: 2023-11-19 11:12 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளத்தில் இருந்து திருப்பாம்புரம் செல்லும் சாலை முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதனால் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையின் நடுவே ஆங்காங்கே பெரிய பள்ளங்களும் ஏற்பட்டுள்ளது. மழைக்காலத்தில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனை அறியாமல் வரும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். பொதுமக்களும் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்



மேலும் செய்திகள்