சாலை வசதி வேண்டும்

Update: 2023-11-19 11:12 GMT

திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில் எஸ்.எம்.ஏ.நகர் பகுதியில் சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மண்பாதை வழியாக செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், ஆட்டோ, பள்ளி வாகனங்கள் அடிக்கடி சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்