சேறும் சகதியுமான வீதிகள்

Update: 2023-11-05 16:10 GMT

தேங்காய்திட்டு நேரு நகரில் உள்ள குறுக்கு வீதிகளில் சைடு வாய்க்கால் மற்றும் சாலைகள் அமைக்கும் பணி நடந்தது. சைடு வாய்க்கால் பணி முடிந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் இன்னும் சாலைகள் அமைக்கப்படவில்லை. சாலை அமைக்க கொட்டப்பட்டுள்ள செம்மண் மழை காரணமாக சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதியில் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையை விரைவில் சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்