ஆபத்தான குழி

Update: 2023-11-05 15:53 GMT

ஆபத்தான குழி

திருப்பூர் கொங்கு நகர் பகுதியில் இருந்து கொங்கு மெயின் ரோடு செல்லும் பாதையில் ரோட்டின் நடுவே மழைநீர் செல்வதற்கான குழிகள் உள்ளது. ஒரு இடத்தில் கான்கிரீட் பலகை முற்றிலும் சேதமடைந்து குழி திறந்த நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இருசக்கர வாகனத்தின் டயர்கள் இந்த குழிக்குள் சிக்கி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதேபோல் இரவு நேரத்தில் இவ்வழியாக நடந்து செல்பவர்களுக்கும் இந்த குழியால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ரோட்டிலும், மாநகரின் பிற பகுதிகளிலும் இதுபோன்று திறந்த நிலையில் உள்ள குழிகளுக்கு மூடி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கண்ணன்,கொங்குநகர்,

8987673762

மேலும் செய்திகள்