குளமாக மாறிய சாலை

Update: 2023-11-05 11:41 GMT

புதுக்கோட்டை மாவட்டம் வேம்பங்குடி கிழக்கு கிராமத்தில் இருந்து செரியலூர் ஜெமின், இனாம் கிராமங்கள் வழியாக அறந்தாங்கி- பட்டுக்கோட்டை பிரதானச் சாலையில் இணையும் தார் சாலை பல ஆண்டுகளாக மராமத்து செய்யப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. வாகனங்களில் சென்றால் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலையில் ஆங்காங்கே பள்ளங்களும், பள்ளங்களில் மழைநீர் குளம்போலும் தேங்கியுள்ளது. இந்த சாலையை சீரமைக்க டெண்டர் விடப்பட்டு பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலத்தில் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருவதால் சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்