சாலை வசதி வேண்டும்

Update: 2023-11-05 10:41 GMT

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த புளியக்குடி வடக்குதோப்பு பகுதியில் சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மண்பாதை வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து தேவையான இடங்களில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்