சாலை வசதி தேவை

Update: 2023-11-05 07:45 GMT

அருமனை பேரூராட்ச்சி 2-வது வார்டு புதுகுளம் வரம்பு பகுதி உள்ள மண் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால் செடிகள், புற்கள் வளர்ந்து ஒத்தையடி பாதைபோல் காட்சியளிக்கிறது. தற்போது இந்த சாலையில் விஷ பூச்சிகள், பாம்புகளின் வசிப்பிடமாக மாறி வருகிறது. இதனால், அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனேயே நடந்து சென்று வருகின்றனர். எனவே, சாலையில் ஆக்கிரமித்துள்ள செடிகள், புற்களை அகற்றுவதுடன் கான்கிரீட் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்