புவனகிரி அருகே ஆணைவாரியில் இருந்து மதுவானைமேடு வரை உள்ள சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி அங்கு புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?