சாலையோர பள்ளம் மூடப்படுமா?

Update: 2023-10-29 11:53 GMT

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டார திருப்பாலத்துறை கிராமத்தில் மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை கழிவுநீர் செல்வதற்காக சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் இருக்கிறது. இதனால்  இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் பள்ளத்துக்குள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். இதன்காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சாலையோரத்தில் இருக்கும் பள்ளத்தினை மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்