சாலையில் தேங்கி கிடக்கும் குடிநீர்

Update: 2023-10-29 11:49 GMT

தஞ்சை அருகே நாஞ்சிகோட்டை மூவேந்தர் நகரில் இருந்து ராஜாளியார்நகர் முதல்தெருவுக்கு செல்லும் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் தண்ணீர் கிடப்பது தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் நீரால் அந்த வழியாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. தேங்கி இருக்கும் தண்ணீரில் கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் நீரை அகற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்