பெயர் பலகையை மறைக்கும் மரக்கிளைகள்

Update: 2023-10-29 11:42 GMT

திருச்சி மாவட்டம் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரில் லால்குடி பிரிவு என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே வளர்ந்துள்ள மரக்கிளைகள் இந்த பெயர் பலகையை மறைத்தவாறு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் செல்லும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்