சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-10-29 11:03 GMT

சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

திருப்பூர் லட்சுமி நகர் பிரதான சாலை சீரமைக்கப்படாமல் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. சில இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து பாய்வதால் பெரிய அளவிலான குழிகள் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சற்று அருகே ரோட்டின் பெரும்பகுதி சேதமடைந்து குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறியபடி இப்பகுதியை கடந்து செல்கின்றனர்.எனவே குண்டும், குழியுமாக உள்ள ரோடை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ராம்,திருப்பூர்.

9877873736

மேலும் செய்திகள்