சாலையோர முட்களால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-10-29 10:54 GMT

சாலையோர முட்களால் வாகன ஓட்டிகள் அவதி

பல்லடம் அருகேயுள்ள அனுப்பட்டியிலிருந்து கள்ளிமேடு வழியாக செல்லும் ரோட்டின் இருபுறங்களும் செடிகள் மற்றும் முட்புதர்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. ரோடே தெரியாத அளவிற்கு முட்புதர்கள் வளர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் போதிய தெருவிளக்கு வசதி இல்லாத இந்த இடத்தில் இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே ரோட்டின் இரு புறங்களிலும் வளர்ந்துள்ள செடிகள் மற்றும் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன்,பல்லடம்.

9898765641

மேலும் செய்திகள்