சுகாதார சீர்கேடு தடுக்கப்படுமா?

Update: 2023-10-22 13:21 GMT

சென்னை ராயப்பேட்டை, மண்டலம் 9 சுந்தரேஸ்வரர் கோவில் தெருவில் உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளாக சாலை சீரமைக்காமல் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சிறிது மழை பெய்தாலே சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தால், கண்துடைப்பிற்காக கட்டிட கழிவுகளை போட்டு சாலை சீர்செய்யப்படுகிறது. இந்த சாலையை முறையாக சீர்செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்