சாலை வசதி வேண்டும்

Update: 2023-10-08 13:12 GMT
  • whatsapp icon

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பழவத்தான்கட்டளை கிராம பகுதியில் குறிஞ்சி நகர்,நைல் நகர் உள்ளது. இந்த நகர்களில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மண் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுவதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்