சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2023-10-08 12:32 GMT

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பாய்காரத்தெரு பகுதி சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.இவை இரவு நேரங்களில் சாலை நடுவே கூட்டமாக படுத்துக்கொள்கின்றன. இதனை அறியாமல் வரும் வாகனங்கள் மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கிக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனர். மேலும், சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்க எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்