பாலத்தில் மண் சரிவு

Update: 2023-10-08 11:40 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பி.மேட்டூர் பிரிவு சாலை அருகே உள்ள ஜம்பேரி வடிகால் மேம்பாலத்தின் இருபுறமும் மண்சரிந்து அபாயகரமான நிலையிலுள்ளது. மேலும் இதன் அருகே செடி, கொடிகள் முளைத்துள்ளதால் இரவு நேரத்தில் இந்த பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பலத்தின் ஓரத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது தெரியாமல் அவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்