சாலை வசதி வேண்டும்

Update: 2023-10-04 13:41 GMT


நாகை மாவட்டம் வாழக்கரையிலிருந்து ஏர்வைக்காடு செல்லும் சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு, முரடாக உள்ளது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் சேறும், சகதியுமாக உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்