புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-10-04 12:27 GMT
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் இருந்து கடம்பன்குளம் வழியாக கூந்தங்குளம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதாக தேவேந்திர சுதாகர் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு புதிய சாலை அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்