சாலைவசதி வேண்டும்

Update: 2023-10-04 11:11 GMT


மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட மாப்படுகை வடக்கு பிடாரி அம்மன் கோவில் தெருவில் சாலை வசதியின்றி மண்சாலையாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் சேறும், சகதியுமாய் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும் செய்திகள்