திறந்தவெளியில் அபாய கிணறு

Update: 2023-09-24 16:43 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம்- ஓமலூர் வழியில் ஏரிக்கரை பஸ் நிறுத்தத்தில் ரோட்டை ஒட்டி திறந்த வெளியில் கிணறு உள்ளது. கிணற்று பகுதியில் திட்டு அல்லது தடுப்பு சுவர் இல்லாமல் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாததால் அந்த வழியாக வரும் கிணற்றுக்குள் தவறி விழும் வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தான வகையில் திறந்த நிலையில் இருக்கும் கிணற்றுக்கு சுற்றுச்சுவர் கட்டி தரவேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கைலாசநாதன், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்