கரடு, முரடான பாதை

Update: 2023-09-20 16:10 GMT
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கோம்பைதொழு கிராமத்தில் மேகமலை அருவி உள்ளது. இந்த அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்தநிலையில் வனத்துறை சோதனை சாவடியில் இருந்து அருவி பகுதிக்கு செல்லும் பாதை கரடு, முரடாக பாறாங்கற்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே அருவி பகுதிக்கு செல்ல பேவர் பிளாக் கற்களால் சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்