தெருநாய்களால் விபத்து அபாயம்

Update: 2023-04-09 19:26 GMT

தெருநாய்களால் விபத்து அபாயம்தெருநாய்களால் விபத்து அபாயம்

திருப்பூரின் பல பகுதியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீதிகளில் கூட்டமாக திரியும் நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களுக்குள் விழுவதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகிறார்கள். இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் ஒரு வித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ெதருநாய்களை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

-கணேசன், திருப்பூர்.

மேலும் செய்திகள்