வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மாசிலாமணி தெரு வழியாக விண்ணரசி மாதா தேவாலயத்திற்கு செல்லும் சாலையில் ஆங்காங்கே பள்ளங்களும் ஒரு சில இடத்தில் விரிசல் ஏற்பட்டும் சேதமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் மிகவும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தயாநிதி, வேலூர்.