பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
குன்னத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இடிந்து மூன்று வருடங்களாக புதிய நிழற்குடை கட்டப்படாமல் உள்ளது. இதனால் குன்னத்தூர் திருப்பூர் சாலையில் உள்ள இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் மற்றும் மாணவி
கள் வெயிலிலும், மழையிலும் அந்த இடிபாடுகளின்மேல் அமர்ந்து இருக்கும் அவல நிலை உள்ளது. எனவே உடனடியாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்ப வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
சம்பத், தொரவலூர்
--------