அடிப்படை வசதிகள் தேவை

Update: 2025-06-29 18:53 GMT

திருவண்ணாமலையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மத்திய பஸ் நிலையத்தின் பின்பக்கம் பல்லவ நகர் உள்ளது. அங்குள்ள வீடுகளுக்கு செல்ல சாலை வசதி இல்லை. இதுதவிர கழிவுநீர் கால்வாய், குடிநீர் வசதி இல்லை. மழைக்காலங்களில் தெருவில் மழைநீர் தேங்குகிறது. எங்கள் பகுதிக்கு சாலை, கழிவுநீர் கால்வாய், குடிநீர் போன்ற அடிப்படை வசதியை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.ஆறுமுகம், சமூக ஆர்வலர், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்

சாலை பழுது