திருச்சி மாநகராட்சி, பெரிய மிளகுபாறை ஆதிதிராவிடர் தெரு ஸ்ரீ துலுக்கானத்தம்மன் கோவில் பின்புறம் சாலையின் நடுவே பாதாள சாக்கடை உடைந்து பள்ளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். மேலும் குழந்தைகள் தெரியாமல் அதனுள் விழுந்து உயிர் இழப்பு கூட ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.