ெபாதுமக்கள் அவதி

Update: 2023-04-12 08:38 GMT

 மாங்கோடு ஊராட்சியில் ஐந்துளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து குளப்பாறை வழியாக காஞ்சிகோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படும் அந்த சாலையில் அவசர தேவைக்கு ஆம்புலன்சு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்