வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள்

Update: 2023-01-29 11:52 GMT

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் ஊரக சாலைகளில் சாலை முக்கம் மற்றும் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் உள்ள வேகத்தடைகள் மீது வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் புதிதாக வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்