சாலையில் ஆபத்தான பள்ளம்

Update: 2022-11-09 16:10 GMT

கீழக்கடையம் ரெயில் நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்தம் முன்பாக சாலையில் பெரிய பள்ளமாக உள்ளது. அதில் மழைநீர் தேங்கி உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. இதனால் அந்த பள்ளத்தில் கம்பு ஊன்றி சிவப்பு நிற துணியை கட்டி தொங்கவிட்டுள்ளனர். எனவே, ஆபத்தான பள்ளத்தை நிரப்பி சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்