எச்சரிக்கை பிரதிபலிப்பான்

Update: 2022-07-16 15:16 GMT

புதுச்சோியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் கன்னியக்கோவில் பகுதியில் விபத்தை தடுக்க சாலையின் நடுவே தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் எச்சரிக்கை பிரதிபலிப்பான் ஒட்டப்படாததால் தடுப்பு கட்டைகள் இருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. தடுப்பு கட்டையில் எச்சரிக்கை பிரதிபலிப்பான் ஒட்டுவதற்கு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்