தேனி நகர் பகுதியில் உள்ள சாலையோரங்களில் பொதுமக்கள் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை உள்ளது. இதன் அடியில் சாக்கடை கால்வாய் செல்கிறது. கால்வாய் அடைப்பை சரிசெய்வதற்காக அவ்வப்போது இந்த நடைபாதையில் பள்ளங்கள் தோண்டப்படும். ஆனால் அதன் பிறகு முறையாக அந்த பள்ளம் மூடப்படுவது இல்லை. இதனால் நடைபாதையில் ஆங்காங்கே பள்ளங்களாக காட்சியளிக்கிறது. பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே பள்ளங்களை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.