அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள்

Update: 2022-08-22 12:01 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புது வேட்டக்குடி ஊராட்சியின் ஆதிதிராவிடர் பகுதியில் குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி சாலைகளின் இருபுறமும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாய ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடடிவக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்