திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா கரடிபட்டி முதல் கஞ்சநாயக்கன்பட்டி வரை போடப்படும் சாலை பணி ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெறாமல் உள்ளது. ஜல்லிகள் போடப்பட்டுள்ள நிலையில் பஸ்கள் மற்றும் லாரிகள் சென்று ஜல்லிகள் குண்டும், குழியுமாக பரவலாக பரப்பி காணப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு மிகவும் ஆபத்து விளைவிக்கக் கூடிய நிலை உள்ளது. இரவு நேரங்களில் வரும்போது மேடு, பள்ளம் தெரியாமல் சறுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.