தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே சிறிய பாலம்அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆமை வேகத்தில் பணி நடைபெறுவதால் இருசக்கர வாகனங்கள், பொதுமக்கள் பஸ் நிலையம் செல்ல சிரமப்பட்டு செல்கின்றனர். மேலும் கால்வாயில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் மழைக்காலம் வருவதற்கு முன் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இளங்கோ, மாரண்டஅள்ளி, தர்மபுரி.