தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 11-வது வார்டு ஆஞ்சநேயர் கோவில் தெருவில் சந்தைப்பேட்டைக்கு செல்லும் வழியில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்வதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.